போலி செயலியை விற்று, மூன்று கோடிக்கு மேல் மோசடி செய்த சென்னையை சேர்ந்த பட்டதாரி கைது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் டிரேடிங்கிற்கு செயலி இருப்பதாகவும், அதுவே தானாக முதலீடு செய்து ஒரு லட்சத்துக்கு மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை லாபம் சம்பாதித்து தரும் என சமூகவலைதளத்தில் விளம்பரம் வெளியானது. இதை பார்த்த பலர் அந்த செயலியை பெற்றனர். புதுச்சேரியிலும் செயலியை பெற்றவர்கள் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த செயலி வேலை செய்யவில்லை. இதனால் செயலியை விற்றவரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.
ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்ட 7 பேர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸார் நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி நபரை கண்டறிந்தனர். மோசடி செய்தவர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ் (32) என்பது தெரிய வந்தது. என்ஜினியரிங் பட்டதாரியான இவர், புதுச்சேரி மட்டுமின்றி, நாடு முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் போலி செயலியை விற்று உள்ளார் என கண்டறியப்பட்டது. இதனால் சுமார் ரூ.3.5 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை சோழிங்கநல்லுாரில் அவரை கைது செய்து
அவரிடமிருந்து 14 லேப்டாப், ஒரு கார், ரூ.7 லட்சம் 60 ஆயிரம் ரொக்கம், மின்சாதன பொருட்களை, செக் புத்தகங்கள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் 500 பேருக்குதான் விற்றுள்ளதாக தெரிந்துள்ளார்.
தொடர்ந்து மோசடிக்கு ஈடுபட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்ததோடு குற்றவாளியும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments